பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1084

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 525 -91էՔ(3, விளங்கும் நடையைக் கொண்டவராய், ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களிற் பழகினவராய், உயிர்போல அருமைவாய்ந்த மனைவிமாருடன், விழப் போகின்ற சுவரை மாதர்கள் என்னும் பெருங்குழியை - என்றும் நிலைத்திருக்கும் சுகம் என எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி யனுபவித்து, அணு அளவு தவிடும் (இக) . தாழேவிழ தாழேவிழுந்து சிதறக் கூடாதென மனம் அழுத்தம் அடைந்து. ஆசைக்கு ஆளாகி, ஊசியின் தன்மைபூண்டவராய் அவிந்து போவதற்கு முன் ஒளிவிட்டு எரியும் சுடர் (தீபம்) போல-(பின்வரும்கேடு தெரியாது மகி ழ்ந்திருந்து) சுத்த தரித்திரன் ஒருவனோ, ஒரு தவபுருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே மேலை வீட்டுக்குப் போய்க் கேள்', கீழை வீட்டுக்குப் போய்க் கேள்' என்ச் சொல்லிக்கொண்டு திடுதிடென்று நடந்து போய்ப், பிச்சை கேட்ட அவர் (வீட்டுக்குள்) நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென் று, அவர்கள் மேல்-மிகக் கோ பித் து நாய்போல மேலே பாய்ந்து விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப்போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒ வீணர்களின் பேச்சே நல்லதென மேற்கொள்ளப் :"?? வரப்போகும் விதியின் போக்கை (சற்றும்) யோசிக்காமலே. மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்று நெகிழ்ச்சி அடைந்து, வீன் பொழுது போக்குபவர்களின் தரிசனத்தையே மேற்கொண்ட பாவியாகி, மறுபிறப்பு உண்டே-அம் மறுபிறப்பில் துன்பம் நேரும் - என ஆறவுரை கூறுபவரை - விடும்.உமது பேச்சை நிறுத்தும் . விழலை யதனின் வருவார்கள் - ப்ோகுவார் - கோன்ர்ப்புல் போலத் தோன்றி மறைபவர்கள்.(மறுமை என்ற ஒன்றை) காண்பார்களா என்ன! என்று எதிர்த்துப் பேசியும், பாசங்களை விட்ட துறவிகளாயுள்ள பெரியவர்களையும், வேதியர்களையும் வெடு வெடு என்று கடுமையாகப் ப்ேசி, (மேளமே சொலாய்) தவில் வாத்தியம் போலப் பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினனாய், (மாதர்களுடன்) புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வருநாளில்.