பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு

மருது நெறிபட முறைபட 1 வரைதனில் உரலி னொடுதவழ் விரகுள இளமையு மிக மாரி. உமிழ நிரைகளி டர்கெட வடர்கிரி கவிகை யிடவல மதுகையு நிலைகெட Xவுலவில் நிலவறை யுருவிய வருமையு மொருநூறு. நிருப ரணமுக வரசர்கள் வலிதய Oவிசயன் ரதமுதல் நடவிய வெளிமையு நிகில செகதல முரைசெயு மரிதிரு மருகோனே. நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய கெtகவை நகtகை ճվ வமகிய Д505 நகருறை திருவுரு மோளே.(1)

  • கண்ணபிரான் மருது முறியத் தவழ்ந்தது - பாடல் 143-பக்கம் 332 கீழ்க்குறிப்பு.

f வரைதனில் உரல்-பெருமா உரலிற் பிணிப்புண்டிருந்து, இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை" - பெரியாழ்வார் 1-2-10, பொய்ம்மாய மருதான அசுரரைப் பொன்றுவித்து பெரியாழ்வார் 3-1-3.-(அசுரர் - கரிய நிறத்தவர்)

  1. மலை குடையாக நிரை காத்தது :

பாடல் 145-பக்கம் 336 கீழ்க்குறிப்பு. X கண்ணபிரான் நிலவறை உருவியது. பாண்டவருக்காகக் கண்ண பிரான் துரியோதனனிடம் தூது சென்றபோது, துரியோதனன் குழி யொன்று பறித்து, அந்தக் குழியில் அரக்கர்களையும் மல்லர்களையும் இருத்தி, அந்தக் குழியின் மேல் ஆசனம் வகுத்து அவரை இருக்க என்றான். அவர் அதன் மிசை இருத்தலும் அந்த ஆசனம் நெறு நெறென அந்த நில அறையிற் புக்கது. இந்த மோசத்தைக் கண்ட கண்ணபிரான் கோபங் கொண்டு, விசுவரூபம் கொண்டு, அங்கிருந்த மல்லர், அரக்கர் முதலிய வீரர்கள் யாவரையும் சின்னா பின்னமாக்கி அழித்தனர். தவசி னிருத்தலுமே, நெறு நெறெனக் கொடு நில அறையிற் புக நெடியவன் அப்பொழுதே.வஞ்சனை நன்றிதெனா. வெகுண்டு. உலகொன்று படும்படி நின்று நிமிர்ந்தனனே. நிலத்தறை மேவிய விரரெலாம்...கல்லென உட்கினர் தத்தம் உடற் பல கால் கொடுதைத்திடவே, ஆயிரம் ஆயிரம் அங்கை புறப்பட அண்டரு மாதவரும் பாயிர நான்மறை பாடி வியந்து பணிந்து புகழ்ந்தனரே" வில்லி.கிருஷ்ணன் துாது 191-208.

  • (தொடர்ச்சி 721 ஆம் பக்கம் பார்க்க)