பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக்கொளியூர்) திருப்புகழ் உரை 759 திருப்புக்கொளியூர் 950. பக்குவமான - தக்கதான ஆசார நிலையில்நின்று, லட்சணமான பொருந்தியதான (சாகர்தி) பச்சிலை முதலான உணவையே உண்டு, சிறந்த மோன நிலையில் நிற்கும் சிவயோகிகள். (தங்களுடைய) பக்தி நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாயுள்ள மோகூ வீட்டைப் பற்றுவதானதும், எப்பற்றுக்களும் அற்றதானதுமான, (நிலையாக) நிலையை நான் அடைவதாய் அந்தகடினமே. (அந் நிலையை அடைந்தவுடனே) மாயமாகவந்து (என்னைப் பற்றியுள்ள) துர்க்குணம் எல்லாம் (வேறாக) என்னை ಸಿ”¦ (அல்லது துர்க்குணம் எல்லாம் மாய்ந்து என்னை விட்டுப் பிரிய) (அப்படையே ஞான உபதேசம்) அந்த ஞான உபதேசமே படையாக - ஞானமே (வாட்) படையாக போம்படி (வாய்பேசு) உபதேசமொழியை வாய்விட்டுரைத்த சற்குரு நானே! உன் அற்புத (அழகிய) திருவடிகளை நான் மறவேன்; உக்கிர (ஊக்கம் மிக்க) பனிரண் புயங்களை யுடையவனே! மெய்ப் புயனே - உண்மை நெறியைக் காட்டும் புயங்களை உடையவன்ே! நீலோற்பல (i) மலர்களின் (ராசி) கூட்டங்களின் நறுமணம் வீச பொருந்தினதாயுள்ள நிலவொளி வீசுவதும், முத்துப்பேர்ல் தெளிவு உள்ளதுமான(நீராவி) நீர் நிலைகள் (உற்பலம்) குவளைமலரையும் (ராசிவம்) தாமரையையும் கொண்ட வயலூர்ப் பெருமானே! (பொக்கம்) பொய் இல்லாத - மெய்ம்மையான வீரங் கொண்டவனே! விக்ரம - பர்ாக்ரமசாலியே! (மாமேனி) அழகிய மேனி (நிறம்) பொன்னொளிவீசும் தேகத்தை யுடையவ்னே! அவிநாசி என்னுந் தலத்தில் (தொடர்ச்சி)0 முருகவேள் பொற் ப்ரபை ஆகாரம்" "மாழைபொருமேனியவ", "செம்பொன் மேனிய" திருப்புகழ் 161. 1301.