பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரீ புருஷமங்கை திருப்புகழ் உரை 815 (வேடை கெடவந் ஆசைகள் எல்லாம் அற்றுப் போம்படி (வந்து சிந்தன்ை) நீ என் எண்ணத்தே வந்து கலந்து. (எனக்குள்ள) மாயை அற - மாயா சக்திகள் ஒடுங்கும்படி - மயக்க அறிவு நீங்க (என்று) எப்போது - பொருந்தியுள்ள வேதங்களின் முடிவில் விளங்கும் பரம்பொருளை அருளுவாய் உபதேசிப்பாய்) (அல்லது ஆசைகள் அழியும்படி வந்து, எனது) எண்ணங்களில் உள்ள் (மாயை) வ்ஞ்சனை, பொய் இவைகள் அழியும்படி வென்று - ஜெயித்துப் பொருந்திய வேதமுடிவில் உள்ள பரம்பொருளை (உ 1 அருள்வாயாக, தாடகை என்னும் அரக்கியின் (உரம்) வலியைக் ಶ್ದಿ, அழித்து, விளங்கிநின்ற பெருமை கொண்ட முநி - விசுவாமித்திர் முநிவரின் யாகத்தைச் சிறப்புற்று விளங்கவைத்து. த (தாழ்வும்) குறையும் ப்லாத வகையில் நடந்து, திலையில் சனகராஜன் முன்னிலையில் வலிய வில்லை முறித்து, (ஒன்) இயற்கை அழகு பெற்ற (ஜானகி) ஜனகமகாராஜன் மகளாம் சிகையின் கொங்கையை அன்ைந்த பின்னர் (திருமணத்துக்குப் 醬 (ஊரில்) அயோத்தியில் ராஜமகுடத்தை. பட்டாபிஷேகத்தைத் துறந்து, ஒப்பற்ற தாய் (கைகேயியின்) சொற்படி நடந்த சிறப்பைக் கொண்டவரான (பூரீ ராமரின்) திருமாலின் மருகனே! ஆதிசேடனுடைய முடிகளும் கலக்கம் கொள்ள, (வாடை) காற்று எங்கும் பரவி வீசத் தேவர்களுக்குக் களிப்பு மேற்கிளர்ந்து எழ, நடனத்தை செய்யும் அழகிய பெருமைவாய்ந்த மயில் வாகனனே! மேகங்கள் படிந்துள்ள சோலைகள் விளங்குவதும், செவ்விய (பொன்) செல்வம் (பொலிவு) பெருகி நிற்பதுவுமான பூ புருட மங்கை என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! அல்லது, (சோலைவளர் பெருமாளே சோலைமன்லயில் - பழமுதிர் சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே! செம்பொன்னிறம் (உந்திய) விளங்கும் பெருமாளே! பூ புருடமங்கை தங்கிய பெருமாளே!) (பரம்பொருள் அருள்வாயே) 0 சோலை - சோலைமலை - பாடல் 93.8 கிழ்க்குறிப்பு. * முருகவேள் - செம்பொன் நிறம் - பாடல் 950 கீழ்க்குறிப்பு.