பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திரையி லமுதென கழைகள் பலசுளை யெனவு மவர்மயல் தழுவு மசடனை திருகு புலைகொலை கலிகள் சிதறிட அருள்தாராய், குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர *எனதாளங். குரைசெய் முரசமொ டரிய விருதொலி டமட டமடம டமட டமவென குமுற திமிலைச லரிகி னரிமுத லிவைபாட: அமரர் முநிவரு மயனு மனைவரு மதுகை மலர்கொடு தொழுது பதமுற அசுரர் பரிகளி யிரத முடைபட விடும்வேலா. அகில புவனமொ டடைய வொளிபெற அழகு சரண்மயில் புறம தருளியொ ரருண கிரிகுற மகளை மருவிய பெருமாளே (9) 518. யமன் வரும்போது காத்தருள் தனதனத் தானணத் தனதனத் தானனத் தனதனத் தானனத் தனதான fகயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக் கணவகெட் டேனெனப் பெறுமாது. கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாணனக் கதறிடப் பாடையிற் றலைமீதே,

  • தாள ஒலியிலும் முருகவேளின் திருநாம ஒலியைக் கேட்கின்றார் அருணகிரியார்.

1 கயல்விழித் தேன் - கயல் மீன் போலும் கண்ணை உடைய தேன்மொழி - மனைவி' என்றும் பொருள் காணலாம்.