பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 458. பரம்பொருளை அடைய தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனரு தததத தததன தததடி தனதனந தததத தததன தததம தனதான *செறிதரும் t செப்பத் துற்பல வெற்பும் பிறிதுமங் கத்தைக் குற்ற விருப்புஞ் சிகரிதுண் டிக்கக் கற்ற தனிச்செஞ் சுடர்வேலும். திரள்புயங் கொத்துப் பட்ட வனைத்துந் தெளியநெஞ் சத்துப் புற்று மயக்கம் திகழ்ப்ரபஞ் சத்தைப் புற்புத மொக்கும் படிநாடும். அறிவறிந் தத்தற் கற்றது. செப்புங் கடவுளன் பத்தர்க் கச்சம றுத்தன் பருள்பவன் பொற்புக் கச்சியுள் நிற்கும் பெருமாணென்றவிழுமுன் புற்றுக் கற்றும ணத்தின் செயலொழிந் தெட்டப் பட்டத_னைச்சென் றடைதரும் பக்வத் தைத்தமி யெற்கென் றருள்வாயே Xகுறியவன் செப்பப் பட்ட எவர்க்கும் பெரியவன் கற்பிக் கப்படு Oசுக்ரன் குலைகுலைந் துட்கச் சத்ய "மிழற்றுஞ் சிறுபாலன்.

  • இந்தத் திருப்புகழ் கச்சி மேற்றளி"த் தலத்துத் திருப்புகழ்

செப்பத்து உற்பல வெற்பு - செங்கழுநீர்மலை - திருத்தணிகை # கடவுள்ன் - கடவுள்: குரு - குருவன் என்றது போல வானோர் குருவனே போற்றி - திருவாசகம் 5-68. x குறியவன் . வாமநர் - திருமாலின் ஐந்தாவது அவதாரம் இவர் மாவலியின் செருக்கை அடக்க அவனிடம் குறுகிய உருவுடன் சென்று மூவடி மண் வேண்டினர். அசுரகுரு சுக்கிரன் தடை செய்தும் கேளாது ம்ாவலி மூவடி மண்ணைத் தானஞ்செய்து தாரை வார்க்கும்போது' சுக்கிரன் குன்டிகையினின்றும் நீர்விழாதவகை சிறுருபியாய்க் குண்டிகையிலிருந்து தடைசெய்ய வாமநர் தர்ப்பையால் நீர்த்தாரை வரும்வழியைக் குத்தச் சுக்கிரன் ஒரு கண் பொட்டையாயினன். பின்பு, வாமநர் நீண்ட உரு (திருவிக்ரம ரூபம் கொண்டு மூவுலகை ஈரடியால் அளந்து ஒர் அடியை மாவலி சிரத்தின்மேல் வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அங்குச் அங்குச் சகல போகங்களையும் அனுபவிக்கச் செய்தனர். oபிரகலாதனுக்குப் பாடம் கற்பிக்கப் புகுந்த சுக்கிரன் இவ்வர லாற்றைப் பாடல் 327.1 (பக்கம் 317 கீழ்க்குறிப்பிற் பார்க்க)

  • மிழற்றல் - மேன்மையாகச் சொல்லல்,