பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 453 ஆசைக் 5_63Gaు நாள்தோறும் முழுகுகின்ற நான் உன்னுடைய அடியாராகிய மெளன ஞானிகளுடனே சேர்ந்து ஒழுகும்படி அருள் புரிவாயாக "அன்புவைத்து அருள்புரிவாயாக நான்கு மறைகளுக்கும் மூலப்பொருளே " என்று (கஜேந்திரன் கூறி ஆழைக்க) உடனே அந்த யானை காணும் வண்ண்ம் நேரே எதிர்விந்து உதவின. திருமாலாம் நாராயணனுடைய மருமகனே! == அன்புவைத்த மகாதவசிகள் வலம் வந்து வணங்கிச் கனகசபையிற் கூத்தப்பிரானுடைய இடதுபாகத்தில் வாழ்கின்ற சிவகாமி நாயகி பெற்ற குழந்தையே புலியூர் (சித்ம்பரத்தில்) வாழும் பெருமானே! வேதநூலிற் சொல்லிய முறைப்படியே தவறுதலின்றி. நாள்தோறும், யாகங்கள் - ஆராதனைகள் - செய்யும் ஒழுக்க அழகைக்கொண்ட ாயிரர் என்னும் பெருமை வாய்ந்த அந்தணர்களால் க நன்றாகப் பூசனை புரியப்படும் தலைவனே! தில்லைவாழ் அந்தணரின் மேன்மை - சிவபெருமானே யாமும் அவர்களின் ஒருவன் என்றதனாற் பெறப்படும் பாடல் 611 பக்கம் 14:45 கீழ்க்குறிப்பைப் பார்க்க, 'அறுபதிற் றாகிய ஐம்பதிற்று முனிவருள் ஒருவனென்றிசைத்த இருபிறப்பாள". சிதம்பர மும்மணி - 23. மேலும் திருஞானசம்பந்தர் இவர்களைச் சிவ சாரூபத்தினராக (கணநாதர்களாக) இருக்கக்கண்டு வணங்கித் தமது பதிகத்தில் 'நீலத்தார் கரியமிடற்றார். நல்ல நெற்றிமே லுற்ற கண்ணினார். பற்று சூலத்தார். சுடலைப்பொடி நீறணிவார். சடையார் சிலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம் - எனப் புகழ்ந்து பரவியுள்ளார். (3-1-3); தாம் கண்ட் கோலத்தைத் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருக்கும் காட்டி அருளினார். அன்டத்திறுைவர் அருளால் அணிதில்லை முண்டத் திருநீற் ஆறு மூவாயிரவர்களும், தொண்டத் தகைமைக் கணநாதராய்த் தோன்றக் கண்டப் பரிசுபெரும் பாணர்க்குங் காட்டினார்' - (பெரிய புராணம் - திருஞான -170), "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" - சுந்தரர் - 7.39-1 "அரியானை அந்தணர்தம் சிந்தையானை - அப்பர் 6:1-1. (தொடர்ச்சி 454 ஆம் பக்கம் பார்க்க)