பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 29 666. இல்லை என்று சொல்வதற்கே வெட்கப்பட்டு, உள்ள பொருளளவுக்கு மறுக்காமல், "ஒரு எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை வெறுக்கத் தக்கவர்கள் என ஆய்ந்தறிந்து பிழைக்கும் வகையில்லாத என்னை, (அல்லது கொடுக்காதவர்களிடம் என் துன்பத்தை எடுத்துக்கூற நாடிச்சென்று பிழைக்கும் வகை தெரியாத என்னை) எந்த முறையினும் உன்னுடைய திருநாமங்களைப் பாடலாக அமைத்துச் சொல்லத் தெரியாத என்னை- முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணராத GTGRATGET)GUT (தொய்யும்) இளைத்துத் வளும் இந்த உடம்பை விரும்பிப் போற்றும் பொய்யனாகிய என்னைப் புறக்கணித்து ஒதுக்கிவிடாமல் பரிசுத்தமான உனது திருவடி ஆண்டருளும் வழி எதுவோ (அறிகிலேன்). வழி ஏதேனும் உண்டோ வலிய அசுரர்கள் மாளவும் நல்ல தேவர்கள் வாழவும் (மை அவரை) குற்றமுள்ளவர்களை (அல்லது மைய வரை-குற்றமுள்ள கிரவுஞ்சகிரியை) (பாகம்பட) கூறுபட்டழிய மோதின...(கோவே). இருள் சூழ்ந்த சோலைகளையும் செவ்விய குளிர் வாய்ந்த மலைப் பக்கங்களையும் உடைய வள்ளிமலையில் வாழ்ந்த கொடிபோன்ற வள்ளியின் தலைவனே! வெல்ல வல்ல மயிலில் ஏ றுதல் வல்ல குமரேசனே! (வெள்ளில்) விளாத்தளிருடன் கடப்பமலரை அணிபவனே! வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த அழகிய (செல்வ நிறைந்த வீதிகளை உடைய வெள்ளி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! (பொய்யனை விடாது ஆளுந் திறமேதோ)

  • நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள் "கந்தர் அலங்.18