பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • இதவிய காணிவை ததையென வேடுவ_னெய்திடு

மெச்சில் தின்று லீலாசல மாடுந் துாயவன் மைந்தtநாளும் இளையவ # மூதுரை மலைகிழ வோனெணXவெள்ள மெனக்கலந்து Oநூறாயிர பேதஞ் சாதமொ ழிந்தவாதான்.

  • கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி

வித்தttநந்த கோபாலம கீபன் தேவிம கிழ்ந்துவாழக்

  • இது கண்ணப்ப நாயனார் சரிதம்-பாடல் 651-பக்கம் 526 கி.ழ்க்குறிப்பு.

t என்றும் இளையாய்" - திருமுருகாற்றுப்படையைச் சார்ந்த வெண்பா 3, 4 அடிகள் முருகன் திருநாமவிசேடத்தால் முடிவிலாத பிறவி ஒழியும் என்னும் உண்மையை விளக்கும் அருமை வாய்ந்தன. "மஞ்சனே மணியே மணிமிடற் றண்ணலே யென உள் நெகிழ்ந்தவர் துஞ்சுமாறறியார் பிறவார் இத்தொன்னிலத்தே" - என்னும் திருவாக்கு இங்கு கருதற்பாலது. (சம்பந்தர் II-52-6)

  1. மூதுரை - திருமுருகாற்றுப்படை - திருமுருகாற்றுப்படையில் "பழமுதிர்சோலைமலை கிழவோனே" என வருவதைக் குறிக்கின்றது. திருமுருகாற்றுப்படை மிகப் பழைய நூலாதலின் மூதுரை எனப்பட்டது திருமுருகாற்றுப்படையைப் பாவுள் முன்னுற வந்து நிற்கும் முருகாற்றுப்படை"- என்றார்-சிவப்பிரகாச சுவாமிகள். X வெள்ளம் - ஒரு பேரெண்(பிங்கலம்) O "நூறாயிரபேதஞ் சாதம்" - உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம்" - சம்பந்தர் I-1324. ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனி எண்பான் ஆரவந்த நான்கு நூறாயிரத்துள் " கந்தர் பா. நால்வகைத் தோற்றம் எழு வகைப் பிறப்பு - இவற்றின் வகை . தொகை விவரத்தை.

ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்காலோர் பப்பத்தாம் - சீரிய பந்தமாம் தேவர் பதினா லயன்படைத்த அந்தமில்சீர்த் தாவரநாலைந்து (11+9+30+14+20=84) என்னும் பழம்பாடல் விளக்குகின்றது. (தொடர்ச்சி 35 ஆம் பக்கம் பார்க்க)