பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பணப்பத்திக் கணத்துத்திப் படுக்கைக்"கச் சபத்திச்சைப் படுக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே (17) 468 கழலைத் தமிழிற் பாட தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான கடத்தைப்பற் றெனப்பற்றிக் கருத்துற்றுக் களித்திட்டுக் கயற்கட்பொற் பிணைச்சித்ரத் தனமாதர். கலைக்குட்பட் டறக்கத்திச் சலித்துக்t கட் டளைச்சொற்பொய்த் திரைக்குட்பட் டறச்செத்திட் டுயிர்போனால், எடுத்துக்கொட் டிடக்கட்டைப் படத்தெட்டத் தணற்றட்டக் கொளுத்திச்சுற் றவர்ப்பற்றற் றவர்போமுன். இணக்கிப்பத் திமைச்செச்சைப் பதத்தைப்பற் றுகைக்குச்சொற் றமிழ்க்கொற்றப் புகழ்ச்செப்பித் திரிவேனோ,

  • இந்தத் திருப்புகழ் காஞ்சியில் கச்சபேசர் கோயிலில் உள்ள முருகவேளுக்கு உரியது.

கச்சபம் திருப்பாற்கடல் கடைபட்ட பொழுது அழுந்தின மத்தாகிய மந்தர மலையைத் திருமால் (கச்சபம்) ஆமையாக முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்படைந்து கடலைக் கலக்கினர் அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவித்து அதன் ஒட்டைச் சிவபிரான் அணியத் தந்தனர். விநாயகர்துதி - பாடல் 5 பக்கம்-14 கீழ்க்குறிப்பு) - பின்னர் திருமால் தனது குற்றம் தீர்ந்து ஈடேறவேண்டிக் காஞ்சியில் சோதிலிங்கத்தைப் பூசித்து இந்த லிங்கம் கச்சபேசர்" என்னும் திரு நாமத்துடன் விளங்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றனர். அந்த லிங்கம் உள்ள ஆலயமே காஞ்சியில் கச்சபேசர் கோயில் என விளங்குகின்றது. 1 கட்டளை-கற்பனை.