பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பூர்) திருப்புகழ் உரை 257 மலைக்குகை யிடம்போல உள்ள கருவிலே (இழி) இறங்கி விழுகின்ற மாக்களுக்கு (மனிதர்களுக்கு) ஏற்படும் (கோட்டாலை) துன்பங்கள் இல்லாமல், (அவிரோதம்) விரோதமின்மை என்னும் உள்ளப்பண்பு வர, (இருவினை) நல்வினை தீவினை இரண்டும் ஒழிய, உணர்வொடு துரங்குவார்க்கே - ஞான உணர்வொடு இருப்பவர்க்கே விளங்கும்படியான (அநுபூதி) அனுபவஞான (அல்லது அருட்ப்ரசாத) வடிவத்தை உனது அழகிய லக்ஷமீகரம் பொருந்திய திருவாக்கால் உபதேசித் தருளவேண்டும்; திரண்டு பருத்த (கிரவுஞ்ச) மலை பிளவுபடவும், குருகுல வேந்தனாகிய அருச்சுனனுடைய தேர்ப்பாகனாய் விளங்கிய கண்ணன் - திருமாலின் - மைந்தனாம் பிரமன் தான் கற்ற வேதமும் தானுமாய் - கலக்கம் உற, அசுரர்களின் மனைவிமார்கள் ஒன்று கூடி தீயில் பாய்ந்து இறக்கவும், தேவேந்திரனுடைய (புரி) ஊர் - பொன்னுலகம் வாழவும் . விரிந்த கடலில் தி எழவும் - தான் முதன்மையாம் தன்மை விளங்க (வாங்கு) பிரயோகித்த (செலுத்தின) வேலாயுதத்தை உடையவனே! கந்தனே! உலகேழின் வறுமை நீங்கும் அளவுக்கு செழிப்பான விளைச்சலைத் தருகின்ற வயல்கள் சூழ்ந்த வேப்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (வாக்கால் மொழிந்தருள வேணும்)