பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருமயேந்திரம். (ஆச்சாபுரத்துக்கு வடகிழக்கு 4-மைல் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 767. மாதர் மயக்கு அற தந்தன தந்தன தாந்த தானன தநதன தநதன தாநத தானன தநதன தநதன தாநத தானன தனதான வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல் வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை குயில்போல. வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை மடவார்பொன், கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள் குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள் கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் சதிகாரர். கஞ்சுளி யுந்தடி யீந்து போவென நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள் கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு முழல்வேனோ, அன்ைடரு டன்தவ சேந்து மாதவர் புண்டரி கன்திரு பாங்கர் கோவென அஞ்சலெ னும்படி போந்து வீரமொ L9-Лггт 670/Г அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட அந்தக னுங்கயி றாங்கை வீசிட விடும்வேலா, * கோ.இரங்கற் குறிப்பு. "அலைகொண்ட வாரிதி கோ கோ கோ கோ என நின் Ամ வாய்விட" . திருப்புகழ் 328, பாடல்கள் (826, 1139)ம் பார்க்க