பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் 32-6)JT 17 (நித்தமும்) ஒடிக் கொண்டிருக்கின்ற வெப்பமுள்ள சூரியனுடனே (சோமனும்) சந்திரனும், ஊழிகாலம் வரையும் அழியாத அன்டங்களும், பல உலகங்களும் (அங்குள்ள) ஊரார்களும், (அந்தரம்) விண்ணில் உள்ள பலவகையான தேவர்களும் திருவடியைப் போற்றி விரும்ப ஊழிடு (அவரவர்க்கு விதியை விதிக்கின்ற (அம்புயன்) பிரமனும், கடலிடையே தங்கியிருக்கின்ற (மால்) திருமாலும் ஆதரவு ஓத உனது அன்பும் உதவியும் வேண்டு மென்று உன்னிடம் முறையிட்டுச் சொல்ல, வெண்ணிறத்து அலைவீசும் கடலிடையே நின்ற சூரனுடைய மார்பினுள் உருவும்படி வேலாயுதத்தைச் செலுத்தினவனே! வேடனைப் போல வேடம் கொண்டவனே! கொடுமை வாய்ந்த யானை போலவும், கொடிய புலி போலவும் இருந்த வேடர்கள் குடியிருந்த திண்ணிய (தினைப்) புனத்தில் இருந்த (மாது) வள்ளியிடம் அதிக மோகம் கொண்டவனாய்க். "கருமேகம் போன்ற மெல்லிய கூந்தலை உடையவளே! நீ கேட்பாயாக, இனிமேல் (எனக்கு வேறு) . தனியான m ஒப்பிலாத (தஞ்சமும்) பற்றுக்கோடாய் - புகலிடமாய் உள்ளவளும் நீயே ஆவாய்" என்றுகூறி (வேளை கொண்ட) அந்த மாதினிடம் காத்திருந்து காவல் கொண்டு பொழுது போக்கின தலைவனே! தேவர்கள் பெருமாளே! (நாயேன் வாழ்வுற அருள்வாயே) வந்திக்கும் மலரோ னாதி வானவர் உரைத்தல் கேளாப் புந்திக்கு ளரிடர் செய் யற்க புதல்வனைத் தருதும் என்னா அந்திக்கு நிகர் மெய் யன்னல் அருள்புரிந் தறிஞ ராயோர் சிந்திக்குந் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான்' - கந்தபுரா 1-11-40-43 ஊழ் இடு அம்புயன் - பிரமதேவன் விதிவிதிப்பை அகூடிர தேவி கோவின் விதிப்படி என்றார் 1204 ஆம் பாடலில்; அக்ஷர தேவி கோ - சரஸ்வதியின் தலைவன் - (பிரமன்). t வேலாவாலயம் = கடல். # வேடனைப்போல் வேடங் கொண்டவனே! புாடல் 994-பக்கம் 876. கீழ்க்குறிப்பு பார்க்க X வேடை = கொடுமை. O வேளை கொண்டபிரானே.வேளைக்காரன் -பொருள் பாடல் 166. பக்கம் 387, பாடல் 624 பக்கம் 451-பார்க்க 2