பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புக மு உரை J40 பத்து முடிகளும் பொடிபட (அவனுடைய) வாகு தோள் இருபதும் ஒரே பாணத்தில் அற்று விழ போருக்கு நேர்ந்து வந்த அசுரர்கள் யாவரும் அழிந்து இறக்கப் ப்ோரைத் தாக்கிச் செய்த கரிய மேகம் போன்ற 蠶 மருகனே! பச்சை மயிலில் எழுந்தருளும் வீரவேல் ஏந்தும் முருகனே! பொல்லாத (நிருதர் குல கால் அசுரர் கூட்டத்தை அதி: காலனாகத் தோன்றினவனே தேவர்கள் பக்தியுடனே திருவ்டியில் விழ அவர்களுக்கு வாழ்வு உதவின் பெருமாளே! (படிறிகள் தம் நேச ஆசைகெட அருள்வாயே) 1148. கலைந்தலைய மலை என்று கூறத்தக்க கனத்த கொங்கைகள் குழைச்சி கொள்ள, நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, (இந்த்ரகோபம்) தம்பலப் பூச்சி போலச் (சிவந்ததும்) கொவ்வைக் கனி ஒத்ததுமான வாயிதழ் துவட்சியுற்று அமுத ஊறலைத் தர, மெச்சும்படியான் (தும்பி) வண்டு, கரிய ல், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான (மென் தொனி) மெல்லிய (புட் குரல்) (கண்டத்தில்) தோன்றி எழ, அன்பு மிக்கெழ . நன்றாகப் பிரகாசிக்கும் (சந்திரன் ஒன்று நிலங்களில்) சந்த்ரகாந்தக்கல் வேய்ந்துள்ள தளத்திலே (விக்ரமஞ் செய்து (லீலா) பராக்ரமங்களை நிகழ்த்தி, (இலங்கு விளக்கிந்தரும் நகரேகை படும்படி, பக்குவமாக நல்ல பொருள் கி ந்த அளவுக்குத் கள் அன்பை அளந்து தந்து, (துவள்) புணரும் (சிற்றின்ப) மாதர்களின்

  • " தும்பி, குயில் புறவு தொணி - இவை புட்குரல் - பாடல் 323-பக்கம் 300 குறிப்பு

f சந்திரன் ஒன்று நிலம் - சந்த்ர காந்தக் கல் வேய்ந்த நிலம் "சந்திர காந்தம் என்னும் தண்மணி நிலம்" சிந்தா. 585 சந்திர கிரணத்தால் நீர் காலும் கல் . "கலாவதி நிலாமணிச் சிலாதலத் துலாவுவாம்" - கலாவதி நாடகம் (வி. கோ. சூ) # பொருள் அன்பளவும் துவள்.இன்ப மாதர் - பாடல் 1147 அடி 3 பார்க்க துவளுதல் - புணர்தல் - "சுரத நாடகமாடும் துடியிடையார் கணவருடன் துவளும்போது"- அருணாசலபுரா. திருக்கண். 14