பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 37 (அனகை) பாவமற்றவள், (அநுபவை) ஞான அநுபவத்தை உடையவள், (அதுதயை) தயையோடு கூடியவள். (அபிநவை) என்றும் புதியவள்.(அதலமுதல்) அதலம் முதலான ஏழு உலகங்களுக்கும் முறைப்படி முறைப்படி சகல (செல்வங்களையும்) அருள்பாலிக்கும் பழையவள் ஆகிய பார்வதி பெற்றருளிய குழந்தையே! (வசுவ பசுபதி) அக்தி சொரூபியாகிய சிவபிரான் மகிழும் படி ஒப்பற்ற உபதேசமொழியான மெளன உபசேதத்தை நீ அவருக்கு உபதேசித்த விசேடப் பெருமையும், தெய்வகுலத்தில் வந்த வநிதையும் (தேவசேனையும்),(வனசரர் வேடர்மகளாம் வள்ளியும், கூரிய வேலாயுதமும், மயிலும், இயற்றமிழில்வல்ல புலமையும் (ஞானமும்), (உபநிடமதுர கவிதையும்) உபநிஷத்துக்களின் சாராம்சங் கள்ைக்கொண்ட இனியபாடல்க்ளர்கிய (திருநெறித்தமிழெ னப்படும் தேவாரமர்கிய உனது பாடல்களும்). கொடைத்திறம் நிறைந்த உனது கருணையும்(உனது) வடிவமும், இளமையும், (வளமையும்) செ மயும் ஆகிய இவையெலாம் அழகுற விளங்கும் பெருமாளே! (பெருமையை வெளிபட மொழிவாயே) 1008 நீண்டதும், வடக்கேயுள்ளதுமான குவடு (மேருமலை) இடிபட்டுப் பொடிபடவும், ஏழுமலைகளும் நெறுநெறு என்று நெளிவு உண்ணவும், முதுமை வாய்ந்ததும் பாம்புகளுக்குத் தலைவனுமான சடனது நெருங்கிய பனாமுடிகள் கி ழி பட பூமி அதிர ளையாடுவதும், ஒப் பிலாததுமான மயி லும்,சூரியனைக் கக்குகின்ற (சூரியன் உதிக்கும் படிக் கூவுகின்ற) கொடியாகிய சேவலும், உனது கருனையும், உன்னிடம் நிலைத்துவிளங்கும் உனது பெருமையும் உனது (நிறமும் ஒளியும்.இளமையும், வளமையும், இரண்டு திருவடிகளும் கடம்பணிந்த o எழு கிரியை அட்டது. பாடல் 13-பக்கம் 117 கீழ்க்குறிப்பு *ஆதி சேடன் திண்டாடுவது: "சேடன் முடி திண்டாட ஆடல்புரி. மயிலாம்" மயில் விருத்தம் 2 tt சேவல் சூரியனை உமிழ்வது பாடல் 387-பக்கம் 47 கீழ்க்குறிப்பு t பார்க்க