பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை +. 81 பற்றுதற்கு (கண்டு களிப்பதற்கு அரிதான (நடமாடு - அத்தாளில் நடனமாடின. அந்தத் திருவடியில் பத்தி (ரசம்) மிகவும் தாக விளங்கும் ஞானப் பாடல்களைப், (பற்று மரபு நிலையாக இப்பூமியில் உள்ள்ோர்களின் இயல்பான வழக்க முறையிலே (தலங்கள் தோறும் சென்று சிவத்தைப்) பாடித் நீ; (ஞான சம்பந்த மூர்த்தியே!) மிகவும் அலைவீசும் கடலும் (வாய் விட்டோட) ஒலமிட்டுப் புரள வெற்றிமயில் மேல் மீது ஏறிச் சென்று சூரபதுமரின் உடலுக்குள் பாய ஒளி வீசும் வேலாயுதத்தைப் புகும்படிச் செலுத்தினவனே! வெற்றிதரக்கூடிய சிறப்பினைக் கொண்ட (சிலையினால்) விற்போரில் மிகவல்லவர்களான வேடர்களுடைய (தினை) வித்து விதைத்து விளையும் (தினைப் புனத்திலும்), மூங்கில்கள் முத்துக் களைத் தரும் மலையிலும் (வள்ளிமலையிலும்) வாசம் செய்த மயிலனைய வள்ளியிடம் (வேளைக்காரப் பெருமாளே) காவல் காத்த பெருமாளே! (புதுமையாகப் பாடப் புகல்வாயே) 1026 விட்டுக் கலந்த புனுகுசட்டம், பன்னிர் கஸ்தூரி இவைகள் கலந்த நறுமணம் உள்ள (படீரச் சேறு) சந்தனச் சேறு நிரம்ப (அப்பியுள்ள) கொங்கையை விலைபேசி விற்றுக் கிடைத்த பொருளுக்குத் தக்க அளவிலே தான். நன்றாக விரிக்கப்பட்ட மலர் தூவினதும், பச்சைக் கர்ப்பூர மணம் கொண்டதுமான_மெத்தைப் படுக் ன் மேலே, புணர்ச்சி ஆசை விருப்பத்தை விற்கின்ற ப்ொது மகளிர் அணிந்துள்ள சுருண்ட கர்தோல்ையையும், அழகிய குை யும் - தாக்கி, விளங்குகின்ற .#. போன்ற மூக்கையும் தாண்டி மன்மதன் ஏவின மலர்ப் பானங்களையும் ஒடும்படிச் (சாடி) மோதி, நெருங்கி மொய்க்கும் (அளி அதனை) வண்டையும், (வேலை) வேலாயுதத்தையும், (சேலை) சேல் மீனையும், கயல் மீனையும் (முக்கி) தனக்குக் கீழ்ப்படச் செய்து அழுத்தி, ய ம் (அட மீறி வருந்தும்ப்டி ம்ேம்பட்டுச் கீறி விளங்குவதும் மை பூசினதுமான கன்பார்வ்ை என்னும் வலையில்ே சிக்கி. அந்த்ப் புன்ன்ெறி ய) ஓடி, முழுத்(தி) வினையாளனாகிய நான்(அல்லது, முட்டிக்கொள்ள் - தீவினைகளுக்கு ஈடான நான்) மயக்க அே கொண்டவனாகிப் போகக் கடவேனோ - மயக்க அறிவு கொண்டவனாய் அழிதலோ என் தலை எழுத் து !