கந்தரந்தாதி 159 13. இடமணித்தென்றல் தேங்கா வணமும் மதகளி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர் தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல் தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந் தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே. (ப உ) தேங்கு - நிறைவாகிய, ஆவன - பசு நிரைமேய்த்த திருமாலையும், மும்மத - மும்மதம் பொழியும், கரி -- அயிராவதத்தையுடைய, வேந்துடன் - இந்திரனோடு, சேர்ந்த கூடிய, விண்ணோர் - தேவர்களையும், தேம் - அத்தேவர்கட்கிடமாகிய (அமராபதியையும்), காவல்-காப்பது, நம் நமது, முனைய கூரியவேல் - வேலாயுதத்தின், பணிதொழில், எனும் - என்று கட்டளையிட்ட, சேய் b - குமாரக் கடவுளின் வாசஸ்தலம், மேல் முன்னேறியிருக்கின்றன, தேங்கா - திகைத்து, அனமும் அன்னப்பட்சியும், தளர் நடையாய் - தோற்கின்ற நடையை உடையவளே, அஞ்சல் - பயப்படாதே, (அவை) செண்பக - செண்பக விருட்சத்தால், பூம் - பொலிந்த தேங்காவனமும் இனிய ஞ்சோலையும், கழுநீரிலஞ்சியும் - செங்கழுநீர் மடுவும், செந்திலும் ருச்செந்துாருமாம். (எ - று) நீ - தோன்றா எழுவாய். அஞ்சல் - பயனிலை, ஏ - அசை (க உ) அன்னமுந் தோற்கு நடையையுடையவளே! விஷ்ணு முதலிய தேவர்களையும் அமராபதியையும் காக்கும்படி வேலையனுப்பிய குமாரக் கடவுளினது திருச்செந்திற்பதியும் பூங்காவனமும் செங்கழுநீர்ச்சுனையும் அணித்தாயிருக்கின்றன; பயப்படாதே (கு உ) துறைப்பொருளிலன்றிப் பொதுவாகப்பொருள் கூறின் இலஞ்சியும் செந்திலுமே என்பது-இலஞ்சித் தலமும் செந்திற்பதியும் எனவும் பொருள் காணக் கிடக்கின்றது. இலஞ்சி என்னும் தலத்தைப்பற்றித் திருப்புகழ்975 பக்கம் 820 பார்க்க மன்னிலஞ்சி ஆழு மலரிலஞ்சி யுஞ்சூழ்ந்த தென்னிலஞ்சி வாழுந் திருக்குமரன் இலஞ்சி முருகன் உலா-74, இலஞ்சி-குளம், மலரிலஞ்சி-மகிழம்பூ:தென் இலஞ்சி-தலம் இடமணித்தென்றல் - என்னுந் துறைக்கு உதாரணம் - திருப்புகழ் 668 கீழ்க்குறிப்புப் பார்க்க