பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 727 2. வெங்காள கண்டர்கைச் ஆலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர்ஆழியும் விபுதர்பதி குலிசமுஞ் சூர்ன் குலங்கல்லி வெல்லா எனக்கருதியே ஆசங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச் 'சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல் கேங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கெளமாரி கமலாசனக் கேன்னிநா ரணிகுமரி த்ரிபுரையயி ரவிஅமலை கெளரிகா மாrதிசைவ "சிங்காரி யாமளை ப்வாதிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச் சிேறுவன்.அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே. (பொ.உ) (1) வெம்கொடிய, காளகண்டர் - விஷத்தை ஏந்திய கழுத்தினராகிய சிவனது (கைச்சூலமும்) திருக்கையில் உள்ள சூலாயுதமும் (திருமாயன்) அழகிய திருமாலது (வெற்றிபெறு) ஜெயம்பெறும் (சுடர் ஆழியும்) ஒளிவீசு சக்கரமும், 2. (வி.புதர் பதி) தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய குலிசாயுதமும் சூரனையும் அவனுடைய குலம்) குலத்தினரையும் (கல்லி) அடியோடு பெயர்த்து அழித்து (வெல்லா) வெல்லுந் தரத்தன அல்ல என்று (கருதியே) எண்ணியே. 3. (சங்க்ராம) போர் வீரனே! நீ (சென்று) ஜெயித்து வந்தருள் என்று தேவர்களும் (நான்முகன்) பிரமனும் நின்று வேண்டிக்கொள்ள, கல்வி என்பது பாடமாயின் மாயைவித்தைகள்' எனப்பொருள் காண்க.