பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. 30. கந்தர் கலிவெண்பா கணாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் - தணாதருளின் பஞ்சவித குய பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத பூரணமாய் நித்தமாய்ப் போக்குவர வும்புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் - தாரளியில் இந்திரசா லம்புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்திற் சாராது சார்வதுபோல் . முந்தும் கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம் ஆகவரும் இச்சை அறிவியற்ற லால் இலய போகஅதி காரப் பொருளாகி ஏகத் துருவும் அருவும் உருவருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள் மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல. பாகமுற வேகடைக்கண் பாலித்துத் - தேகமுறத் தந்த அருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் ஆறத்து வாவு மண்டத் தார்ந்த அத்துவாக் களுமுற் கூறத் தகுஞ்சிமிழ்ப்பிற் கூட்டுவித்து மாறிவரும் ஈரிரண்டு தோற்றத் தெழுபிறப்புள் யோனினண்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய கன்மத்துக் கீடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித் துழலத் திரோதித்து வெந்நிரய சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்கா ரனஞ்சிறிது நண்ணுதலும் தர்க்கமிடும் தொன்னூற் பரசமயந் தோறும் அதுவதுவே --- நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து - முன்னூல் விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகஞ் சார்வித் தருள்பெருகு சாலோக சாமீப சாரூப மும்புசிப்பித் தாலோகந் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் சத்திநி பாதம் தருதற் கிருவினையும் ஒத்துவருங் காலம் உளவாகிப் பெத்த மலயரி பாகம் வருமளவிற் பன்னாள் அலமருதல் கண்ணுற் றருளி உலவா 845 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22