பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/882

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 875 பேரா யிரங்கள் பெற்றபிரான் பெற்ற பிள்ளை யானாலென் பெரிய இமையப் பேராட்டி பெற்ற பெருவாழ் வானாலென் ஆரா னாலென் இனிப்பொறேம் அடியேஞ் சிற்றில் அழியேலே. அனகா மயிலைக் கிரிமுருகா அடியேஞ் சிற்றில் அழியேலே 159) (இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்) . இத் ைஆத்ளைத் தமிழ் வேதன் முடியிற் படுங்கமலம் விண்ணோர் சிரத்தில் அணியதுமம் விசய மயில்மேல் எழுமுளரி விமலர் புயஞ்சேர் திருக்கஞ்சம் சாதம் ஒழிக்கும் அம்புயமெந் தலைமே லிருக்கும் புதுநளினம் தண்டை சதங்கை கிங்கிணிசேர் சலசம் புவியிற் படலாமோ காதம் புதிய மனங்கமழும் கடம்பா முருகா கதிர்வேலா! கந்தா குமரா பெருங்கருணைக் கண்ணா வண்ணா கதியருள் ஐ யா தண் களப மணிமார்பா அடியேஞ் சிற்றில் அழியேலே அரசே! இரிஞ்ப்ே Aషి அடியேஞ் சிற்றில் அழியேலே. (160) பூத்தே உலகம் புரப்பாளைப் பொய்யர் தமக்குக் கரப்பாளைப் பொழியுங் கருணை விழியாளைப் பொற்புங் கற்பும் அழியாளைக் கூத்தை உடையான் இடத்தாளைக் குவிமா முலைமேல் வடத்தாளைக் குறையா எண்ணெண் கலையாளைக் குளிர்சேர் இமய மலையாளை மாத்தே வருக்கும் தெளியாளை வணங்கும் அடியார்க் கெளியாளை வரையைச் சிலையா வளைத்தாளை மறைக்கு முதலாய் முளைத்தாளை