பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் பன்னிரு திருமுறை திருத்தணிகையெம் பெருமான் திருப்புகழ்ச் செல்வத்தை எங்கள் குடும்பத்துக்குத் தந்து அச் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பு ஒன்றையும் இப்ப்ோது தந்தனர்.திருப்புகழே அன்றி முருகன் பெரும்புகழ்ப் பெருநூல்கள் அனைத்தையும் பன்னிரு திருழுறைகளாக வகுக்கலாம் என ஒர் எண்ணத்தை உதவினர். சிவபிராற்கு உரிய பன்னிரு திருமுறைகளுக்கு ஒப்பனவாக, முருகவேளுக்கும் உரிய பன்னிரு திருமுறைகள்ாவ்ன. 1 முதல் 7 திருமுறைகள் முதல் 6յ (լք தி றகளாம் தேவாரம்' போல திருப்புகழும் முதல் ஏழு றகளாம்.( படை வீட்டுத் திருப்புகழ்ப் பாக்கள் ருமுறைகள்: பிற திருப்பதிகளின் திருப்புகழும் பொதுத் திருப்புகழும் ஏழாந் திருமுறை) 8ஆந் திருமுறை திருவாசகம் திருக்கோவையார் எட்டாந் திருமுறை யாமாறு, திருவாசகத்துக்கு இணையாம் கந்தரலங்காரமும் அகப் பொருள் கொண்ட திருக்கோவையாருக்கு ஒப்ப அகப் பொருள் அமைந்த கந்தரந்தாதியும் எட்டாந் திருமுறையாம். 9 ஆந் திருமுறை ஒன்பதாம் திருமுறையாகுந் திருவிசைப்பா'வுக்கு ஒப்ப, இச்ைப் பாடலாம் திருவகுப்பு ஒன்பதாந் திருமுறையாம். 10 ஆந் திருமுறை -- மந்திர நூலாய்ப் பத்தாந் திருமுறையாகும் திருமந்திரத்' துக்கு இண்ையாக, மந்திர நூலாம் கந்தரநுபூதி பத்தாந் திருமுறையாகும். 11 ஆந் திருமுறை அடியார் பலரின் பாடல் தொகுதியாம் பதினோராந் திருமுறைக்கு ஒப்ப, முருகவேளுக்குரிய பழைய அடியார்கள் பலர் பாடினவற்றுள், திரட்டப்பட்ட பகுதிகள் முருகப் பெருமானது பதினோராந் திருமுறையாகும். 12 ஆந் திருமுறை திருத்தொண்டர் புராணமாம் பெரிய புராணத்துக்கு ஒப்ப, முருகவேள் தொண்டர்களின் புராணம் சேய்த்தொன்டர் 'ானம்' என்னும் அருமைப் பெயரு ஒன்று. அது பன்னி -