பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முசுகுந்தர் 893 வந்து தோன்றலும் மன்னவர் மன்னவன் மகிழ்ந்து கந்த வேளடி பணிந்தனன் கைதொழுஉப் பரவ அந்த மில்பகல் விரதங்கள் ஆற்றினை அதனால் எந்த நல்வரம் வேண்டினை அதுபுகல் என்றான். என்ற காலையில் முசுமுகம் உடையவன் எந்தாய் நன்று பாரெலாம் எனதுசெங் கோலிடை நடப்பான் வென்றி மொய்ம்பினன் ஆதியாம் வீரரை எல்லாம் ஒன்று கேண்மையின் துணைவராத் தருதியென் றுரைத்தான். முருகவேள் வீரவாகு முதலானோரிடம் கூறுவது நோற்றல் கூடிய முசுகுந்தன் தும்மினும் எம்பால் ஏற்றமே தரும் அன்பினான் எழுகடற் புவியும் போற்ற வைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய் ஆற்றல் சான்றிரு துணைவராய் இருத்திர்னன் றறைந்தான். வீரவாகுமுதலானோர் மறுத்து, சாபம் பெறுதல் F or -- *** * ஆர்குலம் தனையடும் திறலி னேங்கள் பழிபடப் பானுவின் வழிவரும் சிறுமகன் பாங்கராகி இழிதொழில் புரிகிலோம் எணமறுத் துரைசெய்தார் யாரும் வீரர் ஞானநா யகன்.அவர் மொழிதனைத் தேர்ந்துநம் உரைமறுத்தீர் ஆணதோர் பான்மையால் நீவிர்மா துடவராய்அவனி Ш0&Rourcturdowг சேனையா கிப்புறம் போற்றியே பற்பகற் - சேர்திர் பின்னர் வானுளோர் புகழவே நோற்றுநம் பக்கலில் வருதிர் என்றான். -கந்தபுராணம் 6-23-31. கருவூரில். எண்ணரி ய பலகாலம் இை றயரசு செலுத் தியபின் மண்ணுலகம் புரக்க அங்கிவன்மனுக்கு முடிசூடடித துண்ணெனவே நோற்றிருந்து தொல்கயிலைதினை அடைந்தான்.