பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான் கோழி தான் சிறகை வேகமாக அடித்துக் கொள்ளும், இந்திரஜித்: ଟTଟ୪Tର୪t ? திடீரென்று தத்துவத்தில் இறங்கிவிட்டாய்? சொற்கோ: அழகில்லாத பெண்களும் காதலில் தோல்வியடைந்து கசப்பான அனு பவங்களைப் பெற்ற கன்னியரும் பெண்ணுரிமைபற்றி உரக்கப் பேசுவர். வீணா: குதர்க்கம் பேசாதீர்கள் சொற்கோ: இதில் குதர்க்கம் என்ன இருக்கிறது? கண்டும் கேட்டும் உணர்ந்த அடிமனச் செய்திகள் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மேலே பீச்சும் தண்ணிர் போல என் உள்ளத்திலிருந்து வெளியில் வருகின்றன. தோகை: நீங்கள் - என்ன கூறுகிறீர்கள்? சொற்கோ: பேராசிரியர் மேகலைபற்றித்தான் பேசுகிறேன். முருகுசுந்தரம் கவிதைகள் 101