பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலையில்லாத கடலில் சலனம் ஏதுமில்லாமல் இருக்கலாம். கொந்தளிக்கும் நெஞ்சில் சலனம் . எப்படி இல்லாமலிருக்கும்? அம்ரிதா: உங்கள் கூற்று எனக்குப் புரியவில்லை. நெடுமுடி: கனவிலும் கற்பனையிலும் வாழவேண்டிய பருவ வயதில் சலனம் இல்லாமல் இருக்க முடியாது. அம்ரிதா: எனக்கும் அடிக்கடி கனவுகள் வருகின்றன, என் தமையன் எரிக்கப்படுவது போல...! என் கற்பனைகள் எல்லாம் கல்லறைகளைப் பற்றியதாகவே இருக்கின்றன. வசந்தத்தின் சிலிர்ப்பும் பரவசத் தென்றலின் கிளுகிளுப்பும் காதல் வேதனையோடு ஏக்கக் குரலெடுத்துக் கூவும் குயிலின் நெருப்புக் கீதமும் என்னை - உணர்ச்சி வசப்படுத்துவதில்லை. முருகுசுந்தரம் கவிதைகள் +09