பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி; பெற்றோரின் நினைவு வந்துவிட்டதா? வீணா: ஆமாம். நான்கு திங்கள்களாக அவர்களிடமிருந்து கடிதம் ஏதுமில்லை. அவர்கள் - உயிரோடிருக்கிறார்களா என்பதே ஐயமாக இருக்கிறது. நம்பி: அப்படி உன் பெற்றோருக்கேதேனும் ஆகியிருந்தால் நீ - தமிழகத்திலேயே தங்கிவிடு (வீணா வியப்போடு அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்) நான் உன்னை மணந்து கொள்கிறேன். வீணா: அது பச்சைத் தன்னலம்! நம்பி: எப்படி? வீணா: ஈழத்தமிழர் இன்று நெருப்பாற்றை நீந்திக் கடந்து கொண்டிருக்கின்றனர். எங்கள் - முருகுசுந்தரம் கவிதைகள் + 13