பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடி: உன் வாழ்க்கையில் விழுந்த பேரிடிகளுக்குப் பின்னுமா 虚சாதி மதங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? அம்ரிதா: எனக்கு - நம்பிக்கையில்லை ஆனால் உங்களுக்கு? உங்கள் பெற்றோர்களுக்கு? உங்கள் உறவினர்களுக்கு? நான் - பந்தலற்ற கொடி. பக்கத்திலிருக்கும் மரத்தில் படரத் தயார் ஆனால் - அந்தமரம் எனக்கு நிரந்தரமானது தானா என்று அறியாமல் எவ்வாறு நான் படர முடியும்? நெடுமுடி: அம்ரிதா! என் முழுப்பெயர் உனக்குத் தெரியுமல்லவா? அம்ரிதா: தெரியும், கவிஞர் முருகுசுந்தரம் 122