பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைக்கும் இஃதோர் உரைகல் நான் உன்னை ஏற்றுக் கொண்டால் சாவைத் தவிர வேறு யாராலும் நம்மைப் பிரிக்க முடியாது. அம்ரிதா: திருமணத்துக்குப்பின் நமது சமயம்? நெடுமுடி: மனித நேயம். அம்ரிதா: சாதி? நெடுமுடி: மனிதம்! அம்ரிதா: நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம்? நெடுமுடி: குழந்தைகள் எதற்கு? எனக்கு நீ குழந்தை! உனக்கு நான் குழந்தை! அம்ரிதா: குறும்பு...! (சிரிக்கிறாள்) நெடுமுடி: இந்தியமக்கள் பத்தாண்டுகள் பிள்ளையே பெறக்கூடாது. இந்நாட்டுப் பொருளாதாரம் சீர்திருந்த கவிஞர் முருகுசுந்தரம் i24