பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலை: கொடி முல்லை மண்டபத்தில் நீரும் நானும் கொலு விருந்த போது நான் வளர்த்த பிள்ளைமான் அங்குவர, தொன்னையில் இருந்த நீரை அதற்குக் கொடுப்பதற்கு நீங்கள் அருகில் வர, அது மருண்டு போய் என்னிடம் ஓடி வர, 'இனம் - இனத்தைச் சேர்கிறது" என்று நீங்கள் கேலி செய்ததும் நினை வில்லையா? துஷ்யந்தன்: அழகான கற்பனை! சகுந்தலை: காலடியில் காதலரை வேவுபார்க்கும் காமன், என்னைக் காய்கின்றான் என்று நான் சொன்ன போது - 'கோலமயிலே! உன்னைக் காமன் காய்கிறான்: என்னைக் கொளுத்துகிறான்' என்று சொன்னிரே அது கூடப் பொய்யா? துஷ்யந்தன்: பொய்! பொய்! முருகுசுந்தரம் கவிதைகள் 129