பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல பிரிவுகளாகக் கிளைத்துப் படர்ந்து பரிணமித் திருக்கிறது, அந்தப் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் இன்றைய கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாது, நம்பி: நீங்கள் - சொல்வதைப் பார்த்தால்... புரியாமல் எழுதுவது தான் கவிதை போலிருக்கிறது. மேகலை: அப்படிச் சொல்ல முடியாது, தோற்றப் பொருளிலிருந்து விடுதலை பெற்று, படிக்கும் வாசகனின் பக்குவத்திற்கேற்ப நுண்பொருளாகவும் பருப்பொருளாகவும் விசாலப்படும் வாமனத் தன்மை இன்றைய கவிதையின் தனிச் சிறப்பு, எர்ணா எழுதியிருக்கும் இந்தக் கவிதை எதைக் குறிக்கிறது என்று - சொல் பார்க்கலாம், கவிஞர் முருகுசுந்தரம் 144