பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைதியை விட உனக்குஆரவாரம் தான் பிடிக்குமோ? வீணா: உண்மைதான்? எவ்வளவு நேரம் ஊமை நிலவை உற்றுப் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? நமது சுவையுணர்வு உயிரோட்ட முள்ளதாக இருக்க வேண்டும். வானம் வளைக்கும் இந்திர வில்லும், கூனல் நிலவும், கொட்டிக் கிடக்கும் நட்சத்திரப் பூக்களும் கன்னியா குமரிக் கடற்கரைச் சூரியனும் கொள்ளை அழகுதான்! என்றாலும்சூரியனைப் பற்றிய மாய கோவ்ஸ்கியின் சுவையுணர்வு எனக்குமிகவும் பிடித்திருக்கிறது. நம்பி: யாரவன்? வீணா: உருசியக் கவிஞன்; பகலவனையும் கவிஞர் முருகுசுந்தரம் 150