பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி; ஆனால் - அவைகள் மறுக்க முடியாத உண்மை; பாட்டாளி அரசுகளின் பாசறைகள் அட்டை வீடுகளாகச் சரிந்து போன பிறகுமா உனக்குஉண்மை புலனாகவில்லை? வீணா: நம்பி! சரிவே. புதுப்பிக்கப் படுவதற்குத்தானே? மரங்கள் இலையை உதிர்ப்பது மீண்டும் தளிர்ப்பதற்குத்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஒரு கொள்கை தோற்று விழுந்தால், அந்த இடத்தில் அதைவிட ஆற்றல்மிக்க ஒரு புதிய கொள்கைக்குக் கால் கோளிடப்படுகிறது என்பது பொருள்; பத்துக்கு அடுத்து பதினொன்று தான்; ஒன்பது அன்று! முருகுசுந்தரம் கவிதைகள் 157