பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணன்: சரி என்ன செய்யலாம்? சொற்கோ: போராட்டம்! பல்கலைக் கழக மாணவர் போராட்டம்! பல்கலைக் கழகத்தைச் செயல் படாமல் தடுக்க வேண்டும் வாணன்: போராட்டத்திற்குரிய கோரிக்கை என்ன? மூடிய பெண்கள் விடுதியின் வாயிலைத் திறந்து விட வேண்டும் என்பதா? இந்திரஜித்: போராட்டத்தின் நோக்கம் அது தான்! ஆனால் - அதையே ஒரு கோரிக்கையாக வைப்பது எப்படி? செய்தித்தாளில் இச்செய்தி வெளியானால் எல்லாரும் நம்மைக் கேவலமாகப் பார்ப்பார்கள், சொற்கோ: கேரம் விளையாட்டில் சிவப்புக் காய் குழியில் விழவேண்டும், கவிஞர் முருகுசுந்தரம் #62