பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரஜித்: நீ சொல்ல வருவது என்னவென்று புரிகிறது, வேறு காயை வேகமாக அடித்து மோதிச் சிவப்புக் காயைக் குழியில் தள்ள வேண்டும், அப்படித் தானே? சொற்கோ: இந்திரஜித்! நீ அநியாயப் புத்திசாலி! நீ தான்நடக்கவிருக்கும் போராட்டத்தின் துணைத் தளபதி வாணன்: வாழ்த்துக்கள்! அப்படியென்றால் தளபதி? சொற்கோ: பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறும் வரையில் நான் தான்எல்லாப் போராட்டங்களுக்கும் நிரந்தரத் தளபதி அந்தப் பதவியை என்னிடமிருந்து யாரும்பறிக்க முடியாது. வாணன்: gា தளபதியாரே! போராட்டத்திற்குரிய கோரிக்கை என்ன? முருகுசுந்தரம் கவிதைகள் 163