பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்கோ: கோரிக்கைகளுக்கா பஞ்சம்2 இந்திரஜித்: கோரிக்கைகளைத் தேர்ந் தெடுக்கும் போது கவனம் தேவை. கலைப்பிரிவு மாணவர்கள் மட்டு மன்றிப் பொறியியல் மருத்துவத்துறை மாணவர்களும் பங்கு பெறும்படி கோரிக்கைகளைத் தேர்ந் தெடுக்க வேண்டும். சொற்கோ: உண்மைதான்! போராட்டப் பந்தல் அலங்காரமாகவும் இருக்க வேண்டும்; எல்லாரையும்அடக்கிக் கொள்வதாகவும் இருக்க வேண்டும். இந்திரஜித்: உணவு விடுதி எல்லாருக்கும் பொதுவான பிரச்சனை. 'வழங்கும் உணவு தரமில்லை! வார்டனை மாற்று-என்பது முதல் கோரிக்கை. கோபி: தண்ணிர்த் தட்டுப்பாடு இயல்பான ஒன்று அதையும்சேர்த்துக் கொள்ளலாம். கவிஞர் முருகுசுந்தரம் - 164