பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயங்கர வாதத்தோடு வாழப் பழகிக் கொண்டேன். நம்பி: பயங்கர வாதத்தை உலகிலிருந்து ஒழிக்க முடியாதா? நெடுமுடி: முடியாது! பயங்கரவாதத்தைக் கலையாகக் கற்றுத்தரும் குருகுலங்கள் உலகெங்கும் உள்ளன. பயங்கர வாதம் சமயவாதியின் மந்திரக்கோல்! அரசியல் வாதியின் கைத்துப்பாக்கி! இவர்கள்பயங்கரவாதத்தைத் தங்கள் சொந்தலாபத்துக்குப் பயன் படுத்துவதை என்று கைவிடுகிறார்களோ அன்றுதான்பயங்கரவாதம் ஒழியும். நம்பி: இதுநடக்கக் கூடிய காரியமா? நெடுமுடி: அப்படியென்றால் பயங்கரவாதம் செழித்து வளருவதை யாரும் தடுக்க முடியாது. கவிஞர் முருகுசுந்தரம் 196