பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி: பயங்கரவாதிகளின் கொலைக்கரம் குற்றமற்ற அப்பாவிகளையும் குழந்தைகளையும் கூட விட்டு வைப்பதில்லையே! நெடுமுடி: காடுதீப்பற்றி எரியும்போது சந்தனமரமும் கருக வேண்டியதுதான். நம்பி; அண்ணா! இது கொடுமை! நெடுமுடி: உலகிலேயே அறநூல்களும் மகாத்மாக்களும் அதிகமாகத் தோன்றிய புண்ணியபூமி தமிழகம், அதனால் தான்வன்முறையும் பயங்கரவாதமும் இங்குத்தலைகாட்டாமல் இருந்தன இன்றைய நிலை வேறு நெருப்பு வளையத்தின் நடுவில் சிக்கிய பஞ்சுப் பொதி எவ்வளவு நேரம் தீப்பற்றாமல் இருக்கமுடியும்? நம்பி: அண்ணா இதற்குத் தீர்வுதான் என்ன? முருகுசுந்தரம் கவிதைகள் 197