பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்று குளிர்ந்த பனியாக மாறியிருக்கிறாள். வரவேற்பறையில் மட்டும் அனுமதித்தவள் இன்றுபள்ளியறைக் கதவையும் திறந்து வைத்திருக்கிறாள். இந்த இரசவாதம் இவள் உள்ளத்தில் எப்படி ஏற்பட்டது? இவள் உள்ளம் வேகமாப் பற்றிப் படரும் பட்டாசுத்திரி! அணையாமல் இருக்க வேண்டுமே! காட்சி 23 நேரம் : & ff Q} ఫ్ర) இடம் : பேராசிரியர் மேகலையின் வீடு உறுப்பினர்: மேகலை, நம்பி பேராசிரியர் மேகலை, வீட்டின் முற்றத்திலிருந்த தொட்டிச் செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார், அவருடைய கலைந்த கேசம் முன் பக்கமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சேலையின் கொய்சகத்தைத்துக்கி இடுப்பில் செருகியிருக்கிறார். அந்தக் கோலத்தில் அவர் ஒரு பட்டணத்துச் சகுந்தலையாகக் காட்சியளிக்கிறார். அப்போது நம்பி உள்ளே நுழைகிறான். நம்பி: பேராசிரியருக்கு வணக்கம். மேகலை: வாழ்த்துக்கள்! வா நம்பி! முருகுசுந்தரம் கவிதைகள் 209