பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகாக இசையமைக்கப்பட்ட உயிரோட்டமுள்ள கவிதை! நீ அதற்கு உன்னதமான எடுத்துக்காட்டு. அம்ரிதா: நாங்கள். நண்பர்களாகவும் காதலர்களாகவும் பழகியிருக்கிறோம் இனிக்கணவன் மனைவியாகவும் பழகுவோம். மேகலை: திருமணத்தைப் பற்றியும் இல்வாழ்க்கை பற்றியும் நீங்கள்- - கொண்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் பண்பட்டவை கல்லானாலும் கணவன் என்ற கருத்தும் தவறு கணவன் என்கைக்குள் என்ற கருத்தும் தவறு. ஒருவர் சிறப்பை மற்றவர்மதித்து வாழும் வாழ்க்கையே மேலான வாழ்க்கை! நம்பி: இன்று திருமணத்திற்கு iணாவரவில்லை. மேகலை: விண்கலம் கவிஞர் முருகுசுந்தரம் 218