பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்காம்பல் திருமேனி நறுநீர் ஆடி ஆடைகட்டும் நேரத்தில், காலின் மீது கரப்பான்வந் தேறுவது போலக் கூசிக் கணநேரம் மெய்சிலிர்த்தாள்; தனது காதற் சறுக்குவிளை யாட்டுக்கு நொந்தாள்; நெஞ்சம் சவப்பெட்டி போலானாள்: வைரம் கூடத் துருப்பிடிக்கும் என்றெண்ண வில்லை யென்று தூங்காமல் துயரப்போர் நடத்த லானாள். உடம்புக்கால் புழுக்களினைக் கொதிக்கும் வெய்யில் உருண்டபக்கம் சுடுவதைப்போல், கோதை மேனி படும்படுக்கை இடமெல்லாம் கொதிக்கச் சோர்ந்து பதைப்போடு கண்ணயர்ந்தாள்; இடையில் தன்னை நடுங்கவைக்கும் கனவுக்குள் ஆழ்ந்தாள்; பார்க்கும் நயனவிழிப் போதிரண்டும் உறங்க, முன்னால் படம்போல விரிகின்ற கனவுக் காட்சி பார்ப்பதற்குப் புதியவிழி ஒன்று பெற்றாள். இருட்டுக்குள் கழுவுகின்ற புகைப்படம்போல் எதிரினிலே ஒருருவம் நிற்கக் கோதை விருட்டென்று பதைத்தெழுந்தாள்; மேனி யெங்கும் விரிந்திருக்கும் செங்குருதிக் காயம்; கண்ணிர்ப் பரப்பாலே பந்தலிட்ட விழிகள்; ஏசு பாவிகளின் சிலுவையிலே தொங்கும் காட்சி இருப்பதுபோல் இருக்கின்ற இரக்கத் தோற்றம்; இளையமயில் கண்ணாவென் றலற லானள். கவிஞர் முருகுசுந்தரம் 236