பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதைக் கவிதைகள் போர்வை பரணிநாள் பிறந்தபெருங் கவிஞர், சங்கப் பதக்கத்தில் கண்பறிக்கும் எண்பத் தைந்து தரமான முத்துக்கள் அழுத்திச் சென்ற தமிழ்ச்சிற்பி, தழைத்தபெரும் உம்பற் காட்டை வருவாயாய்த் திருவாய்க்குப் பெற்று வாழ்ந்த வாசீகர், பாணாற்றுப் படை நடத்தும் பெரும்பரணர் எழுந்திருந்தார்; வாய் திறந்து பேசட்டும் என்றவையோர் காத்தி ருந்தார். 'அடிக்கால்கள் கொடிக்காலில் பின்னக், கூடி ஆடிவரும் விறலியரைப் பலாப் பழங்கள் தடுக்கிவிடும் தமிழ்ப்பொதினி வேந்தன், பேகன் தனையின்று பார்த்துவந்தேன்; ஒட்ட கம்போல் அடுக்குமலை முதுகுகளைக் கடந்து செல்ல ஆனைதந்தான்; என்மனைவி நடக்கும் போது நடுக்குமிடை நடுங்காமல் இறுக்கிக் கட்ட நல்லமணி மேகலையும் அவட்குத் தந்தான். “ஆறுறுப்புப் பெற்றுவரும் கலிப்பாப் போல அறுசுவையூண் எமக்களித்தான்; விறலி யர்க்கு நூறுவகை அணிகொடுத்தான்; ஆடை யென்னும் நூல்நயத்தைப் பொன்னிழைத்துக் கொடுத்தான்; மேகம் ஆறுகுளம் ஏரிகடல் நிரப்பு தல்போல் அனைவர்க்கும் அள்ளியள்ளிக் கொடுத்தான்; வாழை, தாறுகளைச் சுமப்பதுபோல், பரிசு தூக்கித் தள்ளாடிப் பாண்ரெல்லாம் நடக்கின்றார்கள். முருகுசுந்தரம் கவிதைகள் 255