பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைவாயில் நின்றிருந்த சலீமின் முன்னால் காவலர்கள் அப்பெண்ணைக் கொணர்ந்தார். 'பெண்ணே! விடிவதற்கு முன்பாக விளக்க ணைத்து விடுகின்றோம்; ஏன்?" என்றான்; தெரியா தென்றாள். 'நடுஇரவில் நடப்பதைக்கண் டவ்வி ளக்கு நாலுபே ரிடம் சொல்லும்; அதனால்!” என்றான். உடைவளை அவனெடுத்தான்; அந்தப் பெண்ணின் உயிர்விளக்கை அக்கணமே அணைத்து விட்டான். கவிஞர் முருகுசுந்தரம் 282