பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியர்களின் ஆரவாரக் குரல் அகல்யாவின் பிரம்மையைக் கலைத்தது. 'அகலிகை! உன் காதுக்குக் கரும்பான சேதி! நாளைஉனக்குச் சுயம்வரம்' . என்றனர் தோழியர். 2. சுயம்வர காண்டம் முக்தல முனிவர் ஆசிரமத்தில் விழாக் கோலம். ஒருபக்கம் இறு மாப்பு - இந்திராதி தேவர்கள். மறுபக்கம் பரபரப்பு - மகுடம் தரித்த மண்ணின் மைந்தர்கள். இன்னுமோர் பக்கம் ஏக்கப் பெருமூச்சு - காவி குறுந்தாடியோடு கமண்டலக் கூட்டம். ஆம். இதுவோர் மும்முனைப் போட்டி. முருகுசுந்தரம் கவிதைகள் - 21