பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரமாய் விண்மீன்கள் பூக்கும்; வானில் அந்திநிலா என்னைப்போல் ஒன்றே பூக்கும் தாய்வயிற்றைக் கீறிவரும் நண்டுக் கூட்டம் தரையின்மேல் பலகோடி; ஆனால் அஞ்சப் பாய்ந்துவரும் சிங்கங்கள் நாட்டில் உள்ள பகுத்தறிவு வாதிகள்போல் ஒன்றி ரண்டே! ஒய்வின்றி நான்நடத்தும் நாக்குச் சண்டை உங்களுக்குள் ஒருசிலரின் சார்பாகத்தான். பிறப்புக்குப் பகையான சாவில், என்னைப் பிடர்பிடித்துத் தள்ளுகிறீர்; மாந்தர் வாழ்வில் இறப்பென்றால் வேறென்ன? கனவு கூட இடையூறு செய்யாத இனிய தூக்கம்! இறப்புக்கு நானஞ்ச வில்லை; ஆனால் என்சாவு தற்கொலைதான் உங்களுக்கு! சிறப்பான நல்லறிஞன் என்னை விட்டால் சீக்கிரத்தில் வேறொருவன் கிடைக்க மாட்டான். பறந்துவரும் வேலுக்கும் கண்சி மிட்டும் பழக்கமறி யாதவன்; முன் வைத்த காலை மறந்தும்நான் மாற்றிவைத்ததில்லை; போர்ப்புண் மலிந்திருக்கும் தழும்புமலை என்றன் தோள்கள்; பிறந்தநொடி முதல் இன்று வரைக்கும் அச்சப் பேயைநான் சந்தித்த தில்லை; ஆனால் அறங்கூறும் நாக்குக்கும் கொடும்ப ழிக்கும் அஞ்சாமல் நானென்றும் இருந்த தில்லை, முருகுசுந்தரம் கவிதைகள் 265