பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்ணுதிர்க்கும் கின்னரமே என்னு டம்பில் பட்டைப்போல் ஒட்டிக்கொண்டிருந்த பெண்ணே! கண்ணிரில் கரைகின்றேன்; நயம் குறைந்த கவிதையைப்போல் நான்விரைவில் சாவன்ே; உன்றன் எண்ணத்தால் ஏக்கத்தால் கறையான் பற்றி இற்றுதிரும் மரத்தைப்போல் அழிந்து போவேன் பெண்ணாலே பெருமையெலாம் இழந்து வீழ்ந்த பெருவீரன் ஆண்டனிபோல் நானும் வீழ்வேன். முருகுசுந்தரம் கவிதைகள் 273