பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்மணி என்றீர்; தேவ கன்னியென் றுயர்த்தி வைத்தீர்; அண்மையில் கிடத்தி என்மேல் அணுச்சோத னைகள் செய்தீர், உண்மையைக் கூறு கின்றேன்; உம்மீது வெற்றி கொண்ட பெண்மையைப் பெற்ற தாலே பெருமிதம் மிகவும் கொண்டேன். தொடுவதும் உங்கள் மார்பில் தோய்வதும் குற்ற மென்றால் அடிக்கடி அதனைச் செய்ய ஆவல்.நான் கொள்ளு கின்றேன். நொடிக்கொரு தரம்சி ணுங்கி நோய்தரும் எனது நெஞ்சை அடக்கநான் முயன்று பார்த்தேன்; அதற்குநான் அடங்கிவிட்டேன். தூக்கத்தில் உம்மை வந்து துளியேனும் இரக்க மின்றித் தாக்கினர் அற்பர்; அந்தத் தருணத்தில் இருந்தி ருந்தால் தூக்கிய கைகள் உம்மைத் தொடவிட்டிருக்க மாட்டேன். தாக்கியோர் என்பி ணத்தைத் தாண்டியே சென்றி ருப்பர். முருகுசுந்தரம் கவிதைகள் 297