பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கத்தைப் புரட்டுகையில் படங்காட்டும் பழத்தோட்டப் பாட நூலே! இக்கடிதம் இந்நூலில் இத்தாலி மொழியினிலே எழுதி டாமல் மிக்கபுகழ் ஆங்கிலச்சொல் மேனியினால் நான் எழுதி யுள்ளேன்; உன்றன் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்திதனைப் படிக்காமல் இருப்ப தற்கே. மாற்றான்பூத் தோட்டத்து மல்லிகையே! அறுநான்கு திங்க ளின்முன் ஆற்றோரம் உன்காதல் அரசியலை அடையாளம் கண்டி ருந்தால் வேற்றொருவன் மார்பிலுனை விளையாட விட்டிருக்க மாட்டேன்; என்றன் நாற்றங்கா லாயுன்னை நானாக்கி என்னன்பை நட்டி ருப்போன். முருகுசுந்தரம் கவிதைகள் 30+