பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட அகத்தியர் அறிஞர் அண்ணாவா? யாரவர்? அவரோர் இலக்கியக் குறும்பலா; இருமொழிக் கொண்டல்; தீந்தமிழ் பரப்பும் திராவிட அகத்தியர். நற்றமிழ் என்னும் பளிங்குத் துணில் சிற்றுளி வேலை செய்யும் சிற்பி. அடிவைத் தேறி அரங்கில் நின்று பொடிவைத்துப் பேசும் புத்தகப் பிரியர். கலைஞரின் கைவிளக்கு; கள்ள மறியா நாவலர் நாக்கு; நாட்டில் புரட்சிப் பாவலர் களுக்குப் பணத்தின் தூக்கு. பகுத்தறி வென்னும் பாசறை விட்டுக் கள்ளரை நோக்கித் துள்ளி வரும்வேல். தொட்டால் சிந்தனை தெறிக்கும் ஈரோட்டுப் பட்டறை தந்த கட்டிப் பிளாட்டினம். எட்டி வரும்பகைக் கீட்டி; நண்பரைக் கட்டித் தழுவும் காஞ்சித் தென்றல், சட்ட சபைமாப் பிள்ளை; அறிஞர் பட்டந் தாங்கிய பைந்தமிழ்க் களிறு. நடக்கும் காவியம்; நாட்டில் மடமை முடக்கு வாதத்தை முறிக்கும் மருந்து. ஏழைகட் கேந்தல்; இல்லா தாரை வாழ வைக்க வந்த காவிரி. வாழிய அண்ணா பெரும்புகழ் ஆழிசூழ் தமிழகம் அமைதி காணவே! முருகுசுந்தரம் கவிதைகள் 317