பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றாலும் முனிவர் முன்னால் மண்டியிட்டு வணங்கினாள். 'அகல்யா! உனக்குச் சாப விமோசனம் வந்துவிட்டது. உன் கற்பின் மீது படிந்திருந்த களங்கம் காலத்தால் காய்ந்து உதிர்ந்து விட்டது. நீ - மீண்டும் தளிர்க்கப் போகிறாய்" - என்றார் விசுவாமித்திரர். அகலிகையின் உதட்டில் உலர்ந்த புன்னகை. 'நான் என் வாழ் நாளில் ஒரே ஒரு ஆடவனைத் தான் உள்ளத்தால் வரித்து ஆராதனை செய்கிறேன். என் கற்பின்மீது களங்கம் படிவது எப்படி சுவாமி - என்று அமைதியாக... ஆனால்... உறுதியாகக் கேட்டாள் அகலிகை. 'யார் அந்த ஆடவன்?" என்றார் முனிவர். முருகுசுந்தரம் கவிதைகள் 37