பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியை நாங்கள் கடவுளாக எண்ணி வழிபட்டோம் 虏 கோட்சேப் பற்களால் கொத்தி அவர் கனவுச் சொர்க்கத்தையும் குப்புறத் தள்ளி அவரையும் அதில் புதைத்துவிட்டாய் நேருவின் சமதருமப் பெட்டியைக் கூடப் பண்டோரா பெட்டியாக மாற்றியது நீதானே? நீ - காளிங்க மடுவை மட்டுமா நச்சுப் படுத்தினாய்? கங்கையை கிருஷ்ணாவை காவிரியை ஏன்... தெற் கெல்லையிலிருக்கும் தாமிர பரணியைக் கூட. கொத்தும் உன் கொடுமையறிந்தும் மோசக்கார மோடி மஸ்தான்கள் தங்கள் சட்டைப் பையில் உன்னைத் தாலாட்டி வளர்க்கிறார்கள். விழாக் காலங்களில் SP_ (FHF (FF) Gðr வெளியில் விட்டு வேடிக்கை காட்டுகிறார்கள். ஏமாளி இந்தியன் முருகுசுந்தரம் கவிதைகள் 45