பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்னையே கொடுத்துவிட்டுத் தாயத்துப் பெற்றுத் திரும்புகிறான். 虏 சங்கராபரணமாக இருந்தாலும் சரி! பாராளுமன்றப் பரந்தாமர்களுக்குப் படுக்கையாக இருந்தாலும் சரி. உனககு - மரண அடி கொடுப்பதற்குச் சரியான ஆயுதத்தை எப்பாடு பட்டேனும் தேர்ந் தெடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் - நீ எங்களை நிர்மூலமாக்கி விடுவாய்! ஏகலைவர் அறிக்கை நெற்றிக் கண்ணைக் காட்டாதீர்கள். எங்களை உங்களால் எரிக்க முடியாது. உங்கள் தோளிலிருக்கும் பீதாம்பரம் நழுவுகிறதே என்பதற்காக நாங்கள் இன்னும் கோவணத் தோடு நின்று கொண்டிருக்க முடியாது. நீங்கள் தார்ப் பாதையில்! நாங்கள் சரளைக்கல் பாதையில்! கவிஞர் முருகுசுந்தரம்